9 வாக்குகளைப் பெற அதிகாரிகள் 360 கிலோ மீட்டர் பயணம்

குமரி: மொத்தமுள்ள ஒன்பது வாக்காளர்களுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 360 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாப புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஒன்று கோதையாறு. இங்குள்ள மின் நிலையத்தில் பணி யாற்றும் அரசு ஊழியர்கள் குடும்பத்தாருடன் அங்கேயே தங்கியுள்ளனர். அவர்களில் 9 பேர் வாக்காளர்கள் ஆவர். இவர்களுக்காக வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டது.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந் திரம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான ஆவணங்கள், பொருட்களுடன் அதி காரிகள் கோதையாறு சென்றனர். எனினும் கோதையாறுக்கு நேரடியான போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் சுற்றுப்பாதையில் அங்கு சென்று திரும்ப 360 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர். எனினும் அதிகாரிகள் இவ்வளவு மெனக்கெட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் தங்களுக்குரிய வசதிகளை செய்து தரவில்லை என்று கூறி 9 வாக்காளர்களும் தேர்தலைப் புறக் கணித்துள்ளனர். இதனால் வாக்குப்பதிவுக்காக சென்ற 12 பேரும் மிகுந்த ஏமாற்றத்து டன் திரும்பினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!