நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே திமுக தலைமையகமான அண்ணா அறிவால யத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் திமுக முன்னணி பெற்ற தொகுதிகளின் நிலவரம் அறிவிக்கப்பட்டபோது, கூடியிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் 'கலைஞர் வாழ்க' என்று முழக்கமிட்டனர்.
அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து முதல் சுற்று நிலவ ரம் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிந்ததும் திமுக தொண்டர்கள் பலரின் முகம் மாறிப் போனது. அண்ணா அறிவாலயமே சோகமயமாக காணப்பட்டது. மூன்றாம் சுற்று, நான்காம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது திமுக வெற்றி பெறப்போவதில்லை எனத் தெளிவாகத் தெரிந்தது. இதனால் பலர் சோகத்துடன் வெளியேறினர். படம்: இணையம்