சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மதிமுக, கம்யூனிஸ்ட்டு கட்சிகளைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்துத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், "தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அரசிதழில் நேற்று வெளியிட்டதும் 232 தொகுதிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முடிந்துவிடும்.
"தமிழகத்தில் நோட்டாவுக்கு 5 லட்சத்து 56,580 வாக்குகள் கிடைத்துள்ளன," என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கடலூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பி.செல்வத்தை (1,964) விட நோட்டாவுக்கு (2,062) அதிக வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதிமுகவுக்கு 3,71,599 வாக்குகள் கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 3,07,303 வாக்குகளும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 3,35,316 வாக்குகளும் தமிழ் மாநில காங்கிரசுக்கு 2,30,711 வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்தக் கட்சிகளைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்பதைக் கீழ்க்கண்ட பட்டியல் காட்டுகிறது.