பேரவை உறுப்பினராகப் பதவியேற்ற ஜெயலலிதா

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி யேற்றுக் கொண்டார். இதைய டுத்து அதிமுக, திமுக, காங் கிரஸ் உறுப்பினர்களும் சட்டப் பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆட் சியைத் தக்க வைத்துக் கொண் டது. இதையடுத்து அக்கட்சிப் பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகத் தேர்வு பெற்றார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 15ஆவது சட்டப்பேரவை நேற்று காலை கூடியது. இச்சமயம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். காலை 11 மணிய ளவில் அவை நடவடிக்கைகள் தொடங்கின. தற்காலிக சபா நாயகர் செம்மலை அவையை வழிநடத்தினார். முதல்வர் ஜெயலலிதா அவைக்குள் நுழைந்தபோது அதிமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகரங்களையும் கூப்பி வணங்கினார் ஜெயலலிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!