29 ஆண்டுகளாக நூறு விழுக்காடு தேர்ச்சி

ஈரோடு குமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முழுத் தேர்ச்சி பெற்று வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி தொடர்ந்து பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்று வருவது அப்பகுதி பெற்றோர்களை மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளையும் அசர வைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ரேவதியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

அதற்கு பதிலளித்த அவர், "மாணவிகளை நான்கு விதமாக தரம் பிரிப்போம். நன்கு படிப்ப வர்கள், சராசரி, மெல்ல கற்போர், மிக மெல்ல கற்போர் என நான்கு வகையில் பிரிப்போம். "இதில் மெல்ல, மிக மெல்ல கற்கும் மாணவிகள்தான் தேர்ச்சிக் கான குறைந்த மதிப்பெண் பெறக் கூட சிரமப்படுவார்கள். "அவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவோம். அவர்களுக்குப் புரியும் படியும் புரியும் வரையும் பாடம் சொல்லிக் கொடுப்போம். மேலும் பள்ளி நேரம் தவிர கூடுதல் வகுப்புகள் எடுப்போம்.

"முக்கியமாக ஒன்பதாவது வகுப்பில் அந்த ஆண்டு பாடத்தை மட்டும்தான் எடுப்போம். "படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் விளையாட்டு, இதர தனித்திறமைகளிலும் கவனம் செலுத்துவோம். "இந்த ஆண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வில் எங்கள் பள்ளி யில் முதல் மதிப்பெண் 489. கடைசி மதிப்பெண் 290. கடந்த ஆண்டு எங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்கள்.2016-05-27 06:00:08 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!