எதிர்க்கட்சிக்கு பெரிய அறை வேண்டும்

சென்னை: "தமிழக சட்டமன்றத்தில் திமுக சார்பில் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உட்காருவதற்கு வசதியாக தலைமைச் செயலகத்தில் பெரிய அறை ஒதுக்க வேண்டும்," என்று நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அவரின் கோரிக்கையை ஏற்று, தலைமைச் செயலக வளாகத்தில் திமுகவுக்குப் பெரிய அறை ஒதுக்கப்பட உள்ளது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை இரண்டாக பிரிக்கப்பட்டுக் காங்கிரசுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. தற்போது தேமுதிக மற்றும் காங்கிரசுக்கு ஒதுக்கிய அறைகளை ஒன்றாக மாற்றி திமுகவுக்கு வழங்கலாம் என்று சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த அறைகளை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் நேற்று பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு சார்பில் சைரன் பொருத்திய கார், ஓட்டு நர் மற்றும் தனி உதவியாளர் போன்ற சலுகை வழங்கப் படும். சட்டப்பேரவை வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக் களுக்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது சபாநாயகரின் முடிவுக்கு உட்பட்டது ஆகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!