ஏமாற்றி திருமணம் செய்த மலேசிய இளையர் கைது

திருச்சி: திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் பேரில் மலேசிய இளை யர் திருச்சி விமான நிலை யத்தில் கைதானார். மலேசியாவைச் சேர்ந்த 36 வயதான மகேஸ்வரன் என்ற அந்த இளையர் சில ஆண்டு களுக்கு முன்னர் சென்னை வந்துள்ளார். அச்சமயம் தியாக ராய நகரைச் சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். பிறகு மனைவியை மலேசியா அழைத்துச் செல்ல உரிய ஏற்பாடுகளைச் செய்வ தாகக் கூறிய அவர், மலேசியா திரும்பியதுடன் அப்பெண்ணை தொடர்புகொள்ளவே இல்லை எனக் கூறப்படுகிறது.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், சென்னை காவல்துறையில் கணவர் மகேஸ்வரன் மீது புகார் அளித்தார். இதையடுத்து மகேஸ்வரன் காவல்துறையால் தேடப்படும் நபராக அறிவிக்கப் பட்டார். அவரது கடப்பிதழ் குறித்த விவரங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங் களுக்கும் அனுப்பப்பட்டு, வழக்கில் தேடப்படுபவர் என்பது பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஏர் ஏசியா விமானத்தில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்துள் ளார் மகேஸ்வரன். அவரது கடப்பிதழை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர் போலிசாரால் தேடப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அவர் திருச்சி விமான நிலைய போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!