ஆயுதக்கிடங்கு தீயில் சிக்கி 20 இந்திய ராணுவத்தினர் பலி

நாக்பூர் அருகில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கு நேற்று திடீர் என்று தீப் பற்றி எரிந்ததில் 20 ராணுவத்தினர் மாண்டனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத் தில் உள்ள புல்காவான் என்னும் இடத்தில் இரவில் பற்றி எரிந்த தீயை அணைக்க தீயணைப் பாளர்கள் பல மணிநேரம் போரா டினார்கள். நேற்றுக் காலை 6.15 மணி யளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதிலும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அவரவர் வீட்டிலிருந்து வெளி யேற்றப்பட்டதாக ஷைலேஷ் நேவால் எனப்படும் வட்டார ராணுவ அலு வலர் 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறு வனத்திடம் தெரிவித்தார்.

ஆயுதக்கிடங்குக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரிகளையும், வீரர்களையும், கிடங்கை சுற்றி பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உள்ளே சென்று மீட்டு வந்தனர். இதில், தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பல வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு ராணுவ அதிகாரிகளும் 18 ராணுவ வீரர்களும் உடல் கருகி மாண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!