சிலை கடத்தல்: தீனதயாளன் சரணடைந்தார்

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான தீனதயாளன் நேற்று போலிசில் சரணடைந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையில் வசிக் கும் தொழிலதிபர் தீனதயாள னின் பங்களாவில் கடந்த 31ம் தேதி மேற்கொண்ட சோதனை யில் ரூ.50 கோடி மதிப்பிலான 55 பழங்கால சிலைகள் மீட்கப் பட்டு, அது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறை யில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சோழர் காலத்தைச் சேர்ந்த 34 சிலை களும், தஞ்சை ஓவியங்களும் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட சிலை கள் அனைத்தும் 600 ஆண்டு கள் முதல் 1,000 ஆண்டுகள் வரை பழைமையானது என்று தொல்பொருள் வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், மூன்றாவது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலி சார் தீனதயாளனின் பங்களா வில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பங்களாவின் முதல் தளத்திலுள்ள ஓர் அறையை உடைத்துப் பார்த்த போது அதில் 4 ஐம்பொன் சிலைகள், 1 கற்சிலை, 3 கண்ணாடிக் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை போலிசார் மீட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!