கோவை: தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக வானிலை மையம் மக்களை குழப்பி வருகிறது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பால சுப்ரமணியம் குற்றம்சாட்டி உள்ளார். கோவையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், உண்மையில் கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை ஏற்கனவே தொடங்கி விட்டது என்றார்.
"பருவ மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மக்களைக் குழப்புகிறது. முதலில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்தார்கள். பிறகு ஜூன் 7ஆம் தேதி என்றும் 9ஆம் தேதி என்றும் கூறி உள்ளனர். "அங்கு மழை பெய்து வருகிறது. பிறகு எப்படி இனிமேல்தான் தொடங்கும் என்று கூறமுடியும்," என அவர் கேள்வி எழுப்பினார்.2016-06-08 00:28:59 +0800