சென்னை: முதல் திருமணத்தை மறைத்து மோசடி செய்ததோடு சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தததாக சின்னத் திரை நடிகை சுபஸ்ரீ மீது அவரது இரண்டு கணவர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். முதல் கணவர் தொடர்ந்த வழக்கில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை சுபஸ்ரீ, 33, சரணடைந்தார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சொந்தம் பந்தம் தொடரிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் கல்யாண பரிசு தொடரிலும் நடித்து வருகிறார்.
சுபஸ்ரீக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த சரணவன் என்பவருக்கும் 2007 மே, 25ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஏழு வயதில் மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுபஸ்ரீக்கும் சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலிசில் சுபஸ்ரீ வரதட்சணைப் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், தாம் சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றி வருவதாகவும் தமது சொத்துகளை அபகரிக்க சுபஸ்ரீயும் அவரது குடும்பத்தாரும் முயற்சி செய்வதாகவும் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் சரவணன்.
சிங்கப்பூரில் பணிபுரிந்த சரவணனுடனான திருமண பந்தத்தைச் சட்டப்படி முறித்துக்கொள்ளும் முன்பாகவே அமெரிக்காவில் பணிபுரியும் சீனிவாசனை மணந்தார் சுபஸ்ரீ. படம்: இணையம்