சென்னை: புறநகர்ப் பகுதியான மணப்பாக்கத்தில் உள்ள ஹோண்டா கார் காட்சியகத்தில் 20 பேர் கொண்ட கும்பல் நேற்று அதிகாலை புகுந்து காவ லாளியைப் பலமாகத் தாக்கி விட்டு 7 ஹோண்டா வாகனங்களைத் திருடிச் சென்றது. கொள்ளை சம்பவம் பற்றி காவலாளி உடனடியாக நிர்வாகத்துக்குத் தகவல் அளித்தார். அதனை அடுத்து போலிசாருக்கு தகவல் தரப்பட்டு உடனடியாக போலிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், வளசர வாக்கம் பகுதியில் 7 புத்தம் புதிய ஹோண்டா வாகனங்கள், நம்பர் பிளேட்டுடன் நிற்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காட்சியக ஊழியர்கள் அவ்விடத்துக்கு விரைந்து சென்றனர்.
அந்த வாகனங்களில் எண் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது. ஆனாலும் வாகனங்களை ஊழியர்கள் அடையாளம் கண்டனர். கொள்ளைக் கும்பல் அந்த வாகனங்களில் போலி எண் தகடுகளைப் பொருத்தியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளைக் கும்பல் வளசரவாக்கத்தில் விட்டுச் சென்ற 7 புத்தம் புதிய வாகனங்களையும் போலிசார் மீட்டுள்ளனர். மிகவும் நூதன முறையில் நடத்தப்பட்ட இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணையை போலிசார் மேற்கொண்டுள்ளனர். ஹோண்டா நிறுவனத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.2016-06-09 06:00:00 +0800