பருவமழை தொடங்கியது; குற்றாலத்தில் குளிக்கத் தடை

­­சென்னை: தமி­ழ­கத்­தி­லும் கேர­ளா­வி­லும் தென்­மேற்­குப் பரு­வ­மழை தொடங்­கி­யி­ருப்­ப­தாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் பாலச்­சந்­தி­ரன் கூறி­யுள்­ளார். ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்­கும் இந்தப் பருவமழையால் தமி­ழ­கத்­தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்­டி­யுள்ள பல ஏரி, ஆறு­களில் நீர் நிரம்­பும். கடந்த சில தினங்க­ளா­கவே தமி­ழ­கத்­தின் பல பகு­தி­களில் இரவு பகலாக மழை பொழிந்து வரு­கிறது. குற்­றா­லத்­தில் உள்ள அரு­வி­களி­லும் நீர் கொட்டி வரு­கிறது. இந்தப் பருவ காலத்­தில் தமி­ழ­கம் மட்­டு­மின்றி இந்­தி­யா­வின் பல பகு­தி­களில் இருந்­தும் பலர் குற்­றா­லம் செல்­வ­துண்டு. ஆனால் அங்­குள்ள பல அரு­வி­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­ டுள்­ள­தால் அரு­வி­களில் குளிக்­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இது சுற்றுலாப் பய­ணி­களுக்கு சற்று ஏமாற்­றத்தை அளித்­தா­லும் பேரிரைச்­ச­லு­டன் கொட்டும் அரு­வி­களைக் கண்டு ரசிக்­க­வும் கூட்டம் அதி­க­ரித்து வரு­கிறது.

சென்னை­யில் நேற்று முன்­ தி­னம் மாலை பெய்த கனத்த மழையில் அதன் முக்கிய பகு­தி­களில் சுமார் ஒரு மணி நேரத்­துக்­குள் 5 செ.மீ. மழை பதி­வா­னது. கடந்த 24 மணி நேரத்­தில் பேச்­சிப்­பாறை­யில் அதி­க­பட்­ச­மாக 9 செ.மீ. மழை பதி­வா­கி­யுள்­ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!