சிங்கப்பூரில் ஏழு உடற்பிடிப்பு நிலையங்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என போலிஸ் தெரிவித்துள்ளது. இதில் சில நிலையங்களில் சட்டவிரோத சேவைகளும் வழங்கப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் நாட்டின் பல இடங்களிலும் உடற்பிடிப்பு நிலையங்களில் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக நேற்று வெளியிடப் பட்ட போலிஸ் அறிக்கை குறிப்பிட்டது.
சைனாடவுன், லிட்டில் இந்தியா, ஜாலான் புசார், மிடில் ரோடு, பென்கூலன் ஸ்திரீட், ஜாலான் சுல்தான், கோல்மென் ஸ்திரீட் ஆகிய இடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை கூறியது. உடற்பிடிப்பு அமைப்புகள் சட்டத்தின்கீழ் விதிமுறைகளை மீறிச் செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக போலிஸ் மத்திய பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நட வடிக்கை மேற்கொண்டனர்.