ஆட்டோவில் சென்றபோது லாரியில் தலைமுடி சிக்கி பெண் பரிதாப பலி

காஞ்சிபுரம்: ஆட்டோவில் சென்றபோது பக்கவாட்டில் வந்த லாரியில் தலைமுடி சிக்கியதில் திருப்பதியைச் சேர்ந்த 38 வயது மோகனா பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் தனது கணவர், குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் வந்திருந்தார் மோகனா. அங்குள்ள கோவில்களைச் சுற்றிப்பார்த்த பின்னர், ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். மஞ்சம்பாடி அருகே ஆட்டோ வந்தபோது, மோகனாவின் தலைமுடி வெளியே பறந்து, பக்கத்தில் சென்ற லாரியின் முன்பக்கக் கதவில் சிக்கிக்கொண்டது. இதனால் ஆட்டோவில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட மோகனா, லாரியில் சிக்கி அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!