புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் சேர்ந்து படித்திருந்தாலோ, அல்லது அவரிடம் தேநீர் வாங்கி இருந்தாலோ அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் விவசாயி களுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 'சாய் கி சர்சா' என்ற தலைப்பில் பேரணி நடத்தப் பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திக் விஜய் சிங், "தாம் தேநீர் விற்றதாகக் கூறியதுடன் தேர்தல் பிரசாரத் திலும் அதை ஒரு உத்தியாக மோடி பயன்படுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் ஒருவர் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன் என்று கூறினாலோ, அவரிடம் தேநீர் வாங்கியிருந்தாலோ கண்டிப்பாக அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்," என்றார். மேலும், பள்ளிக் கல்வியை முடித்துப் பல்கலைக் கழக நுழைவுக்குத் தயாராக இருந்ததாக முன்பு கூறிவிட்டு இப்போது பட்டதாரி என மோடி கூறிக்கொள்வது வியப்பாக உள்ளது எனவும் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.