ஆட்சியில் இல்லாதபோது மட்டுமே பேசும் ஜெயா: கனிமொழி விமர்சனம்

தஞ்சை: தமிழக அரசு மதுக் கடைகளை மூடுவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத போதுதான் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவார் என்று விமர்சித்தார். "ஆட்சியில் இருக்கும்போது, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பதில்லை. அதுபோலவே அண்மையில் பிரதமரைச் சந்தித்த போதும், தமிழகம் எதிர்கொள்ளும் முக்கியமான பல பிரச்சினைகளை அவரிடம் எடுத்துக் கூறவில்லை. "எந்தெந்த மதுக்கடைகளை மூடப்போகிறோம் என்பதில் அரசிடம் தெளிவு இல்லை. மேலும், மதுக்கடைகளில் இரவு 10 மணிக்கு பிறகும் மது விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பது தெரிகிறது. மதுவிலக்குக் கொள்கை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கிறது," என்று கனிமொழி (படம்) சாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!