53 மணி நேரம் யோகா: சாதனை முயற்சி

சென்னை: உலக சாதனைக்காக தொடர்ந்து 53 மணி நேரம் யோகாசன பயிற்சி மேற்கொண்ட பெண் வழக்கறிஞருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித் துள்ளனர். ரஞ்சனா என்ற அப்பெண் சென்னைப் பல்கலைக்கழக யோகா பயிற்சித்துறையின் ஆதர வுடன் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார். திங்கட்கிழமை காலை ஒன்பது மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் தனது தொடர் யோகா பயிற்சியைத் தொடங்கிய அவரை ஊக்கப் படுத்தும் விதமாக கூடியிருந்தோர் உற்சாகக் குரலெழுப்பி ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக செய்தியாளர்களி டம் பேசிய அவர், அனைத்துலக யோகா தினத்தையொட்டி யோகா சனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இம்முயற்சி என்றார்.

"53 மணி நேரம் தொடர்ந்து யோகா பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து கின்னஸ் புத்தகத் தில் இடம்பெறுவதே எனது லட் சியம். அறுநூறுக்கும் மேற்பட்ட யோகாசனங்களை சுழற்சி முறையில் 53 மணி நேரம் செய்யப் போகிறேன்," என்றார் ரஞ்சனா. இதற்கு முன்னர் நேப்பாளத் தைச் சேர்ந்த ஒரு பெண் 50 மணி நேரம் 15 நிமிடம் தொடர் யோகா பயிற்சி செய்ததுதான் உலக சாத னையாக உள்ளது.படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!