புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால கல் வெட்டுப் பொறிக்கப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட வரைவு செங்கோடுகள், வரைவு எழுத்து கள் அடங்கிய அரிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. உலகின் பாரம்பரிய வரலாற்று உண்மைகளை, தற்கால மக்கள் அறியும் வகையில் குகைகளில் வரையப்பட்ட செங்கோட்டு ஓவியங்களும் ஓலைச்சுவடிகளும் களிமண் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களும் சான்றுகளாக அமைந்துள்ளன என்று புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும் ஆசிரியரு மான மணிகண்டன் தெரிவித்தார்.
வரைவு செங்கோட்டு எழுத்து கள் அடங்கிய இந்தச் சான்றுகள், நொடியூர் சிவன் கோயில், நார்த்தாமலை கடம்பர் கோயில், திருவிடையாப்பட்டி சிவன் கோயில்களில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், ஒரே கோயி லில் வெவ்வேறு மன்னர்களின் கல்வெட்டுகளைக் காண முடி கிறது. நொடியூரில் மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டும் பித்தி எனும் சுவர் பகுதிகளில் மாறவர்மன் குலசேகரத்தேவன் கல்வெட்டுகளோடு காவி மூலம் செங்கோட்டு எழுத்துகளை முன்வரைவு செய்து உள்ளனர்.
இதேபோல், நார்த்தாமலை கடம்பர் கோயில், திருவிடையாப் பட்டி சிவன் கோயில்களில் குறுக்குக் கோடுகள் மட்டும் போடப்பட்டு, அதனுள் கல்வெட்டுப் பொறிக்கப்பட வேண்டிய முன் வரைவு எழுத்துகள் காவியைப் பயன்படுத்தி- எழுதப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டின் இறுதி யில் முன்வரைவு செய்யப்பட்டு இதுநாள் வரை பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில், ஆங் காங்கே அழிந்து மறைந்த நிலையில் இருந்தாலும் மிக நுட்பமான காவிக்கோடுகள் உள்ளிட்டவையுடன் தெளிவாக கிடைத்து உள்ளன. "காவியைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்த எழுத்துருக்கள், கல்வெட்டியல் வரலாற்றின் மிக அரிய ஆவணமாக உள்ளதோடு, பல்வேறு தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கு அடித் தளமாக அமையும்," என்று திரு மணிகண்டன் கூறினார்.