திருவள்ளூர் ஏரிகளில் உடைப்பு: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், ஏரி உடைப்பைச் சரிசெய்ய வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக திருவள்ளூரின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

"இம்மாவட்டத்தில் மொத்தம் 1,236 ஏரிகள் உள்ளன. அவற்றுள் 862 ஏரிகள் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின்போது முழுமையாக நிரம்பின. எனினும் 225 ஏரிகளின் கரைகளில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது. அப்போது மணல் மூட்டைகளை அடுக்கி பொதுப்பணித் துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர். "இப்போதும் கனமழை பெய்வதால் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, மணல் மூட்டைகள் சரிந்துவிட்டன. எனவே ஏரிக்கரைகள் முழுமையாக உடைவதற்கு முன் உடைப்பைச் சரி செய்யவேண்டும்," என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஏரி உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!