சேலம்: தமிழக கிராமப் புறங்களில் நடமாடும் காவல்நிலையம் வேண்டும் என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மக்கள் புகார் கொடுக்க சென்றால் அவர்களை அலைக்கழிப்பதையே காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது என சாடினார்.
"பிரபலமானவர்கள் யாரேனும் புகார் கொடுத்தால், ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கின்றனர். ராக்கெட் விடும் இந்த விஞ்ஞான யுகத்தில் காவல் துறையினருக்கு சுற்றுக்காவல் பணிக்கு தமிழக முதல்வர் மிதிவண்டி கொடுப்பது வேதனைக்குரிய விஷயம். பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்திட கிராமப்புறங்களில் நடமாடும் காவல் நிலையம் அமைக்க வேண்டும்," என்றார் தமிழிசை.