ஹைதராபாத்: ஹைதராபாத், பெங்களூரு, மராட்டிய மாநிலத்தின் ஒரு நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனர் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அந்தத் தீவிரவாதிகள் ஜமாத் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
எழுபது முதல் 90 தீவிரவாதிகள் வரை ஹைதராபாத், பெங்களூருக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரம்ஜான் சமயத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டு அந்தத் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று உளவுத் துறை கூறியது. ஆனால் பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகள் எப்போது தாக்குதல் நடத்துவார்கள் போன்ற விவரங்களை உளவுத் துறை வெளியிடவில்லை.