காரைக்கால்: திருநள்ளாறு அருகே அகலங்கண் மேலத்தெருவில் கிராம கழிவுநீர்த் தொட்டி கட்டு வதற்கு 5 அடி ஆழத்தில் நேற்று முன்தினம் பள்ளம் தோண்டப் பட்டது. அப்போது சிறிய சிலைகள் மற்றும் ஆபரணங்கள், செப்புப் பானை ஒன்றில் சாமி உருவம் பதித்த செப்புத் தகடு, பீடம், குடுவை, வளையல் போன்ற 20க்கும் மேற்பட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த சாமி சிலைகள் 400 முதல் 500 கிராம் எடையுள்ளவை. சுமார் 6 அடி ஆழம் தோண்டிய போது சிறிய குடம் போன்ற உலோ கம் தட்டுப்பட்டது.
மேலும் தோண்டியபோது அதில் உலோகத்தாலான சிறிய அம்மன் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து திருநள்ளாறு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த வருவாய்த்துறையினர் சிலை மற்றும் ஆபரணங்கள், தகடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இனி அந்த இடத்தில் அனுமதியின்றி பள்ளம் தோண்டக்கூடாது என்று உத்தரவிட்ட வருவாய்த் துறையினர் கைப்பற்றிய பொருட்களை ஆட்சியர் கேசவனிடம் ஒப்படைத்தனர். இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளம் தோண்டும்போது எவ்விதப் பொருட்கள் கிடைத்தாலும் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் எந்த உலோகத்தால் ஆனவை மற்றும் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது தொல்பொருள் துறையினரின் ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்றனர்.