லதா ரஜினிகாந்த் மீது புகார்; விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

சென்னை: தவறான ஆவணங்கள், போலி நிறுவனம் உருவாக்கியதன் தொடர்பில் லதா ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. அவருக்கு கடன் வழங்கிய 'ஆட்பீரோ' என்ற நிறுவனம் அவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. கோச்சடையான் திரைப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் முரளி மனோகர், 'ஆட்பீரோ' நிறுவனத்தின் அபிர்சந்த் நஹாரி டம் ரூ. 14 கோடியே 90 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதற்கு முரளி மனோகர் தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட்டிருந் தார். இதற்காக சில சொத்து களின் ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் கடன் தொகையில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயை மட்டுமே தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப ஒப்படைத்தார்.

எஞ்சிய தொகையைத் தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. முரளி மனோகர், லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது நிதி மோசடி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக் கும் வகையில் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி 'ஆட்பீரோ'வின் மனுவை கர்நாடகா உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் தவறான ஆவணங்கள், போலி நிறுவனம் உரு வாக்குதல் போன்ற காரணங் களால் லதா ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடன் வழங்கிய 'ஆட்பீரோ' வழக்குத் தொடுத்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லதா ரஜினி காந்த் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!