காரைக்குடி: காதல் திருமணம் செய்த இளையரை அவரது தாயும் மாமாவும் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட ஹரிஹரன் (23 வயது), தனது கல்லூரியில் படித்த ரம்யாவை காதலித்து மணந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந் தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலை எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. இந்நிலையில் கருத்து வேறு பாடு காரணமாக காதல் தம்பதியர் பிரிந்தனர். இதையடுத்து ரம்யா தாய் வீட்டிற்குச் செல்ல, ஹரிஹரனும் தன் பெற்றோர் வீட்
டிற்கு வந்தார். நேற்று முன்தினம் அவர் தனது தாய் நாகேஸ் வரியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது சகோதரரின் உதவியுடன் மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதை யடுத்து இருவரும் கைதாகி உள்ளனர்.