அஞ்சல் மூலம் லஞ்சம்

இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் தாம் அளித்த மனு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாநிலத் தகவல் ஆணைய உயரதிகாரிக்கு பதிவுத் தபாலில் ரூ.500 லஞ்சப் பணம் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். "ககரியா மாவட்டத்தைச் சேர்ந்த சனோஜ் மிஸ்ரா என்ற அந்த ஆடவர், தமது மனுவைப் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி தம் கைப்பட இந்தி மொழியில் ஒரு கடிதத்தை எழுதி, அதனுடன் அதிகாரியின் பிள்ளைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுக்கும்படி ஐநூறு ரூபாயையும் இணைத்து அனுப்பியுள்ளார்," என்று பீகார் தகவல் ஆணைய அதிகாரி ஒருவர் விவரித்தார்.

கடித உறையில் இடம்பெற்று இருந்த முகவரியில் 'தகவல் ஆணைய உயரதிகாரிக்கு' என்று மிஸ்ரா குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இது தொடர்பாக தலைநகர் பாட்னாவில் உள்ள சச்சிவால்யா காவல் நிலையத்தில் ஆணையம் புகார் அளித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!