எஸ் ஜெகத்ரட்சகனுக்குச் (படம்) சொந்தமான நாற்பது இடங்களில் நேற்று நூற்றுக்கு மேற்பட்டவருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை அடையாறிலும் நுங்கம்பாக்கத்திலும் உள்ள அவரது வீடுகள், சென்னை, புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், விழுப்புரத்தில் இருக்கும் மது ஆலை, சென்னை பாரத் பல்கலைக் கழகம், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி உட்பட பல இடங்களில் போலிஸ் பாதுகாப்புடன் நேற்று ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜெகத்ரட்சகன் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து இந்தச் சோதனைகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. சோதனையில் குற்றங்கள் நிகழ்ந்ததற்குச் சான்றாக பல ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கறுப்புப் பணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.