மணநாளன்று சோகம்: குளியலறையில் வழுக்கி விழுந்து மணமகன் மரணம்

திருமணம் நடக்க மூன்று மணி நேரமே இருந்த நிலையில் குளி யலறையில் மணமகன் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தில் நிகழ்ந்துள்ளது. தக்சிண கன்னட மாவட்டம், பாஞ்சா எனும் ஊரைச் சேர்ந் தவர் சச்சின், 32. இவருக்கும் காயத்ரி என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடப்பதாக இருந்தது. இதனால் இருவரின் வீடுகளும் விழாக்கோலம் பூண் டிருந்தன. மணநாளன்று காலை 8.30 மணியளவில் முகச் சவரம் செய்வதற்காகத் தமது வீட்டின் குளியலறைக்குள் நுழைந்தார் சச்சின். உள்ளே காலை வைத் ததுமே அவர் வழுக்கி விழ, தலையில் பலமாக அடிபட்டு அவர் மயக்கநிலைக்குச் சென்று விட்டார். உடனே, அங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில் இருக்கும் புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்து வர்கள் கூறினர். இதையடுத்து, கொண்டாட்ட மாக இருக்கவேண்டிய நாள் சோகமயமானது. இதற்கிடையே, கேரள மாநி லத்திலும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. கோட்டயம் அருகே கருக் கச்சல் எனும் ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 32 வயது அனில் குமாருக்கு நேற்று திரு மணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, கோட் டயம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அவர் அனுமதிக் கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அனிலின் திருமணத்திற்காக வந்திருந்த உறவினர்களும் நண் பர்களும் அவரது இறுதிச் சடங் கில் பங்கேற்றுவிட்டு கண்ணீ ருடன் வீடு திரும்பினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!