லோதா குழு பரிந்துரை; பறிபோகும் பதவிகள்

புதுடெல்லி: லோதா குழுவின் பரிந்துரையால் இந்தியக் கிரிக் கெட் வாரிய பொறுப்பில் இருக்கும் பலரின் பதவிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ‌ஷிர்கே, பொருளாளர் அணிருத் சவுத்ரி, இணை செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோரும் தங்கள் மாநில பொறுப்பை இழக்க நேரிடும். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொறுப்பில் இருக்கக்கூடாது என்பதில் சரத்பவார் உள்ளிட்ட சிலர் தங்களது பதவியை இழக்க நேரிடலாம். லோதா குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவற்றை 6 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்கள் ஆக இருக்க இயலாது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!