அதிரடி சோதனை; காவலரை தூக்கிவிடும் பெண் அதிகாரி

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் சட்ட விரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட எஸ்.பி. ரித்திகா பகத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். சேமிப்புக் கிடங்கின் நுழைவு வாயில்கள் அனைத்தும் அடைக் கப்பட்டு இருந்தன. சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தன. உடனடியாக ரித்திகா சுவரின் மீது கிடுகிடு வென்று ஏறினார். ஆனால், அவருடன் சென்ற ஆண் காவலரால் எவ்வளவுதான் முயற்சி செய்தும் சுவரின் மீது ஏறவே முடியவில்லை.

அவர் பலமுறை முயற்சி செய்து பார்த்தும் தொப்தொப் பென்று கீழே விழுந்து உள்ளார். இதனையடுத்து, சுவரின் மீது ஏறி சில அடி தூரம் சென்ற ரித்திகா, ஆண் காவலர் ஏற முடியாமல் சிரமப்படுவதை பார்த்து திரும்பி வந்து கைக் கொடுத்து உதவினார். பின்னர், அவர்கள் சேமிப்புக் கிடங்கில் நடத்திய சோதனையில் சுமார் 70,000 லிட்டர் மண்ணெண் ணெய்யை பறிமுதல் செய்தனர். அதனுடைய மதிப்பு ரூ. 50 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.

சுவரின் மீது கிடுகிடுவென்று ஏறிய பெண் போலிஸ் அதிகாரி, ஆண் காவலரை மேலே தூக்கிவிட கைகொடுத்து உதவுகிறார். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!