திருச்சி: திருச்சி அருகே சாலையோரத்தில் சிதறிக் கிடந்த 232 பாஸ்போர்ட் கோப்புகளைப் போலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பன்னப்பட்டு ஊராட்சி அருகில் சாலையோரத்தில் பாஸ்போர்ட் கோப்புகள் சிதறிக்கிடந்தன.
அவை திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியா குமரி உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த பாஸ்போர்ட் கோப்புகள் எனக் கூறப்படு கிறது. சிதறிக்கிடந்த பாஸ்போர்ட்களைப் பார்த்த கிராம மக்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். பன்னப்பட்டிற்கு வந்த காவல்துறையினர் 232 பாஸ்போர்ட் விண்ணப்பங் களையும் எடுத்துச் சென்ற னர். இதுகுறித்து புத்த நத்தம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.