வழக்கறிஞர்களுக்கான சட்டத் திருத்தம் நிறுத்திவைப்பு

சென்னை: வழக்கறிஞர்களுக் கான நெறிமுறைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப் படுவதாக சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அறிவித் ததையடுத்து, வழக்கறிஞர்களின் போராட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களை விடு தலை செய்ய வேண்டும் என்றும் 126 வழக்கறிஞர்கள் மீதான பணி இடைநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாநிலம் தழுவிய அள வில் கடந்த சில தினங்களாக வழக்கறிஞர்கள் பல்வேறு ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். திங்கட்கிழமையன்று நடந்த சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான வழக் கறிஞர்கள் பங்கேற்றனர்.

உயர் நீதிமன்ற வாயிலில் குவிக்கப்பட்ட போலிசார். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!