லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கூக்னா சேவா நகரில் வசித்து வரும் ரத்தன் சிங் தோமர் இரவு பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக இவர் தனது 13 வயது மகள் ஜாஸ்மினின் பள்ளிக் கட்ட ணத்தைக் கடந்த மூன்று மாதங்களாகச் செலுத்தவில்லை. இந்நிலையில், அந்த மாணவி யின் வீட்டுக்கு வந்த ஆசிரியர்கள் கட்டணம் கட்டாதது தொடர்பாக ரத்தன் சிங் தோமருடன் வாக்கு வாதம் செய்தபோது அது தகராறானது. எனவே, சம்பவம் அறிந்து வந்த போலிசார் தோமரை இழுத்துச் சென்றனர்.
இதையெல்லாம் பார்த்து மனமுடைந்த ஜாஸ்மின் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தனது மகளின் பரிதாப முடிவுக்குப் பள்ளி நிர்வாகத்தைக் குற்றம்சாட்டிய தோமர், இதற்கு காரணமானவர் களைக் கைது செய்ய வேண்டும் எனப் போலிசில் புகார் அளித்தார். இதனையடுத்து, தகராறில் ஈடுபட்டவர்களில் 4 ஆசிரியர் களை போலிசார் கைது செய் தனர்.