குர்கான்: இந்தியாவின் வட, வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடும் மழை காரணமாக சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், குர்கானில் போக்கு வரத்து முடங்கியது. தேசிய நெடுஞ்சாலையில் ஏற் பட்ட இந்த நெரிசலால் 15 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து முடங் கியது. இதனால், வாகனமோட்டிகள் நேற்று முன்தினம் இரவு முழுவதையும் சாலையிலேயே கழிக்க நேர்ந்தது. இதனால், டெல்லியில் இருந்து குர்கானுக்கு வாகனங்களில் வரவேண்டாம் என்று குர்கான் போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குர்கான் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் வரை டெல்லி= குர்கான் சாலை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரி விக்கின்றன.
இதற்கிடையே, பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதி கரித்து வருவதால், அசாமில் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இதனால் பிரம்மபுத்திரா நதிக்கரையை ஒட்டிய ஊர்களிலிருந்து லட்சக்கணக்கானோர் வீடுகளைவிட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து உள்ளனர். மேலும் எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான விலங்குகள் இடம்பெயர்ந்துள்ள தாகவும் சில விலங்குகள் உயிரிழந்ததாகவும் வனத்துறை அதிகாரி கள் கூறினர். இதேபோல், பெங்களூரு சாலையில் கரைபுரண்ட வெள்ள நீரைக் கடக்க மக்கள் படகுகளைப் பயன்படுத்தினர். ஒரு சிலர் தேங் கிய நீரில் மீன்பிடிக்கத் தொடங் கினர். ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால் பாலாற்றில் ஆந்திர அரசு கட்டிய 12 அடி உயர தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.
சாலைகளில் தேங்கிய வெள்ளநீரால் டெல்லி=குர்கான் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியதால் சுமார் 12 மணி நேரம் வாகனமோட்டிகள் சிக்கித் தவித்தனர். படம்: ஏஎஃப்பி