சென்னை: திருவண்ணாமலைக் கோவில் கோபுர விரிசலை
சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்
சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
நேற்று சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர்
எ.வ.வேலு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்
கோயிலுக்குப் பல நாடுகள், பல மாநிலங்களில், பல
மாவட்டங்களில் இருந்து மாதம் தோறும் ஏராளமான பக்தர்கள்
கிரிவலம் வருவதாகத் தெரிவித்தார்.
"இக்கோயில் கோபுரத்தின் உட்பகுதியில் விரிசல் ஏற்பட்டது
சம்பந்தமாக அங்குள்ள அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு
கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக என்ன நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது?" என வேலு கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,
அக்குறிப்பிட்ட விரிசல் சீரமைக்கக் கூடியதுதான் என்றார்.
"இது தொடர்பாக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு
அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். விரைவில் சீரமைப்பு
பணிகள் தொடங்கும்," என்றார் அமைச்சர்.
கோயில் கோபுர விரிசலைச் சீரமைக்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
2 Aug 2016 10:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Aug 2016 10:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!