வேலூர்: வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதல் மணம் புரிந்த இளம்பெண் அவரது உறவினர்களா லேயே கடத்தப்பட்டார். எனினும் சென்னையில் கடத்தப்பட்ட அவரை அடுத்த மூன்று மணி நேரங்களில் போலிசார் மீட்டனர். இதையடுத்து அவரைக் கடத்திய தந்தை வழி உறவினர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வர் சென்னிமலை, தொழிலதிபர். இவரது 21 வயது மகள் சசிகலா பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் 24 வயதான ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்ப வரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இக்காதல் குறித்து தெரியவந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்த சசிகலா குடும்பத்தினர் ரமேஷை மறந்துவிடும்படி எச்சரித்துள்ளனர். எனினும் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி ரமேஷை திரு மணம் செய்ய முடிவெடுத்தார் சசிகலா. அதன்படி கடந்த மாதம் 5ஆம் தேதி சசிகலாவும் ரமேசும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை திருவேற்காடு கருமாரி யம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின் னர் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இருவரும் வீட்டிற்கு அருகே உள்ள கடைக்குச் சென்றபோது திடீரென அங்கு காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி ரமேசை மிரட்டி, சசிகலாவைக் கடத்திச் சென்றது. பதறிப்போன ரமேஷ் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். சென்னை போலிசார் வேலூர் காவல்துறையை உஷார்படுத்தினர். இதையடுத்து தேடுதல் வேட்டை துரித கதியில் தொடங்கி யது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டி ருந்த போலிசார் சசிகலாவை கடத்தியவர்கள் வந்த காரை அடையாளம் கண்டு விரட்டிச் சென்றனர். அதன் பலனாக மதியம் 12 மணிக்கு கடத்தப்பட்ட சசிகலாவை 3 மணிக்கு மீட்டனர். அவரைக் கடத்தியவர்கள் அவரது தந்தை சென்னிமலையின் உறவி னர்கள் என்பது தெரியவந்துள்ளது.