இந்தியாவின் கேரள மாநிலத்தில் 21 பேரை சமயத் தீவிரவாதத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பே ரில் சமய குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை, கேரளா ஆகிய மாநி லங்களின் காவல்துறையினர் இணைந்து நடத்திய வேட்டையில் பெரிங்காத் தூர் என்னும் பகுதியில் பிடிபட்டார். முகமது ஹனீஃப் என்னும் அவர் வயநாடு மாவட்டம் கம்பலக் காட்டைச் சேர்ந்தவர். கடந்த மாதம் திடீரென்று காணாமல் போன 21 இளையர்களை உலக ளவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பில் சேர்த்துவிட உதவி யதாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. சமயத் தீவிரவாதக் கொள்கைக் களை அந்த இளையர்களிடம் அவர் பரப்பி வந்ததாகவும் சொல் லப்பட்டது.
மும்பைப் போலிசிலும் முகமது ஹனீஃப் மீது புகார் பதிவு செய் யப்பட்டு உள்ளதால் அந்த நகரின் காவல்துறையினரும் கேரளா வந்து தேடுதல் வேட்டையில் இணைந் தனர். காணாமற்போன இளையர்க ளில் ஒருவரான அஷ்ஃபாக் அகமது என்பவரின் தந்தையார் மும்பைப் போலிசில் புகார் செய் திருந்தார். அதனைத் தொடர்ந்து சமயச் சொற்பொழிவாளர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் அர்ஷி குரேஷி என்பவர் கைது செய்யப்பட்டார். அதேபோல மாயமான மற்றோர் இளையரான மெரின் என்னும் மரி யம் என்பவரின் சகோதரர் கேரள போலிசில் புகார் செய்திருந்தார். கைது செய்யப்பட்டுள்ள முகமது ஹனீஃப்பிடம் கேரள காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்னர் அவர் மும்பைக்குக் கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்பட்டது.