சென்னை: சேலம் விரைவு ரயிலின் சரக்குப் பெட்டியில் கொண்டு வரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 250 பேரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் ரயில் கொள்ளை சென்னையில்தான் நடந்தது என்பதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. சென்னை சேத்துப்பட்டு ரயில்வே பணிமனை அருகே ரயில் கூரையின் ஒரு பகுதியான கண்ணாடி இழைப் படலத்தைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
இந்தத் தடயமானது விசாரணையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவும், கொள்ளையர்களை அடையாளம் காணவும், விசாரணை வளையத்தைச் சென்னைக்குள் சுருக்கிக் கொள்ளவும் உதவும் என போலிசார் கருதுகின்றனர்.