சென்னை: திரைப்படப் பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இளையர் ஒருவர் சாலையில் சென்ற இளம்பெண்ணை நோக்கி பாடல் பாடி கேலி செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த அவர் திரைப்பட பாடல்கள் இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்கவேண்டும் என கருத்து தெரிவித்தார். "திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை இடம் பெறச் செய்வது, வன்முறைக் காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால் நம்முடைய உயர்ந்த கலாச்சாரத்தையும், அறநெறியையும் திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர்.
திரைப்படம் போன்ற ஊடகங்கள் இளைய சமுதாயத்தினரின் வலிமையான ஆசானாக, குருவாக உள்ளது. இந்த ஆசான் சொல்லி கொடுக்கும் பாடம் வாழ்நாளில் எப்போதும் அவர்க ளுக்கு மறக்காது," என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.2016-09-04 06:00:00 +0800