புதுடெல்லி: காஷ்மீர் நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அம்மாநில அரசு கலவரங்களைச் சமாளிக்கத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. நேற்று நடந்த இக்கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
அங்கு அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கிக் கொள்ளவும் பல்வேறு சலுகைகளை ரத்து செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
இது தவிர பிரிவினைவாதத் தலைவர்களுக்கு வெளிநாடுகள் பண உதவி செய்வதைத் தடுக்கவும் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் விசாக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, காஷ்மீரில் நேற்று மீண்டும் வன்முறை வெடித் தது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர். மேலும் நேற்று காலை ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் காயமடைந் தனர்.
காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக நடந்த வன்முறையில் 75 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள். படம்: ராய்ட்டர்ஸ்