சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக் கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, இப்புதிய காற்ற ழுத்த தாழ்வு நிலையானது வங்கக் கடலில் உருவாகி உள்ளதாகத் தெரிவித்தார். "மேற்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் 43.3 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
"அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும்," என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். சென்னையைப் பொறுத்தவரை யில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன், வெள்ளிக்கிழமை காலை சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.