போதையில் கார் ஓட்டிய சட்டக்கல்லூரி மாணவர்; ஆட்டோ ஓட்டுநர் பலி

சென்னை: சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் போதையில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந் தார். இதில் காரை ஓட்டி வந்த மாணவரும் அவரது நண்பரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரு மாணவர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கதீட்ரல் சாலையில் நேற்று அதிகாலை 3.00 மணி அளவில் விபத்து நிகழ்ந்தது. அப்போது ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் கள் மீது 'போர்ஷே' என்ற வெளி நாட்டு ஆடம்பரக் கார் மோதியது. சட்டக்கல்லூரி மாணவர் விகாஸ் விஜயானந்த், 22, காரை ஓட்டி வந்தார். அவர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கார் மோதியதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுநர் பலியானார். ஏறக்குறைய 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. விகாஸ் ஓட்டி வந்த காரும் சேதமடைந்தது. மேலும் சாலை யோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் தூங்கிய ஓட்டுநர்கள் 9 பேர் காயம் அடைந்தனர். முன்னதாக அதே காரில் விகாஸ், மெரீனா கடற்கரையை நோக்கி அதிவேகத்தில் சென்ற தாகக் கூறப்படுகிறது.

சட்டக்கல்லூரி மாணவர் ஓட்டி வந்த ஆடம்பரக் கார் நசுங்கி கிடக்கும் காட்சி. படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!