தேறி வருகிறார் ஜெயலலிதா; கருணாநிதி திடீர் உருக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 10.15 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத் துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதித்த மருத் துவர்கள் காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு ஆகியவற்றால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டதாகத் தெரிவித் தனர். நேற்றுக் காலை அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டது. குணமடைந்து அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை சார்பாக அறிவிக் கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை யின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் நேற்று பகல் 12 மணிக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதல்வர் ஜெய லலிதா காய்ச்சல் மற்றும் நீரிழப்பு காரணமாக இங்கு அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது அவருக்கு காய்ச்சல் இல்லை. வழக்கமான உணவு சாப்பிடுகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து உடல் நிலையை கண்காணித்து வரு கிறோம்,"‚என்று விளக்கினார். ஆனால், ஜெயலலிதா எப் போது வீடு திரும்புவார் என்பது குறித்து எந்த ஓர் அறிவிப்பும் இல்லை. இதற்கிடையே, ஜெய லலிதாவின் நுரையீரலில் நீர் கோர்த்து இருப்பதாகவும் அந்த நீர் அகற்றப்பட்டுவிட்டதாகவும் விகடன் உள்ளிட்ட சில இணையச் செய்திகள் தெரிவித்தன.

மருத்துவமனை முன்பு அதிமுக வினர் நேற்று நடத்திய வழிபாடு. படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!