தனி மாநிலம் கேட்டு கூர்காலாந்து பகுதியில் போராட்டம் நடத்திய மக்கள்

தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்காலாந்து பகுதியில் கூர்க் ஜன முக்தி மோர்ச்சா கட்சியினர் சார்பில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கூர்க் இனத்தவர்கள் கூர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா தனியாகப் பிரியும்போது, மேற்குவங்க அரசு ஏன் கூர்காலாந்தை தனி மாநிலமாக்கக் கூடாது எனப் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர். முழு அடைப்பால் டார்ஜிலிங், கலிம்போங், குருஷோங், சுக்னா ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. முழு அடைப்பால் கூர்காலாந்து உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நிலவியதால் 100க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். படம்: -ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!