அதிமுக பிரமுகர் தற்கொலை மிரட்டல்

கோயில்பட்டி: கோயில்பட்டியில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைத் தொலைபேசிக் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவ்வட்டார அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோயில்பட்டி நகராட்சி 8வது வார்டு செயலாளரான 55 வயது ராமச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராமச்சந்திரன் நேற்றுக் காலை கோயில்பட்டி புதுகிராமத்தில் கைத்தொலைபேசிக் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த கோயில்பட்டி கிழக்குக் காவல் நிலைய காவல் துறையினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் அவர் கைத் தொலைபேசிக் கம்பத்திலிருந்து கீழே இறங்கினார். அவர் மீது காவல்துறையினர் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!