கோயில்பட்டி: கோயில்பட்டியில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைத் தொலைபேசிக் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவ்வட்டார அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோயில்பட்டி நகராட்சி 8வது வார்டு செயலாளரான 55 வயது ராமச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராமச்சந்திரன் நேற்றுக் காலை கோயில்பட்டி புதுகிராமத்தில் கைத்தொலைபேசிக் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த கோயில்பட்டி கிழக்குக் காவல் நிலைய காவல் துறையினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் அவர் கைத் தொலைபேசிக் கம்பத்திலிருந்து கீழே இறங்கினார். அவர் மீது காவல்துறையினர் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.
அதிமுக பிரமுகர் தற்கொலை மிரட்டல்
1 Oct 2016 06:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Oct 2016 07:45
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!