சென்னை: தமிழகத்தின் உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிடு வதற்கு 65,376 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 22,469 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. இம்மாதம் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங் களாக நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழு வதும் பல பதவிகளுக்குப் போட்டி யிட மனுத்தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 65,376 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று மனுத் தாக்கல் தொடர்ந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அதிரடியாக அறிவிக்கப்பட்டதால் போதுமான அவகாசம் வழங்கப்பட வில்லை என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் கூறி யிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் உள் ளாட்சித் தேர்தலில் 8 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனியாகவே களம் காண் கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி உள் ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப் புடன் செயல்பட்டு வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 65,000 பேர்
1 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Oct 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!