மின் கம்பியிடம் தலைவணங்கி தப்பித்த ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மின் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்குவதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள 223 சட்டமன்றத் தொகுதிகளை இணைக்கும் வகையில் பேரணி நடத்தி வருகிறார் ராகுல். கிட்டத்தட்ட 2,500 கிலோ மீட்டர் தூரமுள்ள பேரணியின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஆக்ரா சென்று சேர்ந்தார்.

அங்குள்ள தாஜ் நகரத்தின் ஃபவ்வாரா பகுதியில் உள்ள மகாராஜா ஆக்ராசென் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாலை ஒன்றை அந்தச் சிலைக்கு அணிவிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த மின்சாரக் கம்பி ஒன்று ரா-குலின் தலையில் உரசியது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராகுல், தலையைக் குனிந்தவாறே பின்னோக்கி நகர்ந்தார். ராகுல் நிலைதடுமாறுவதைக் கண்ட சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்தனர். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!