சென்னை: தேவாலயத்துக் குள் புகுந்து மர்ம நபர்கள் கவுன்சிலர் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆவார். நேற்றுத் காலை தாம்பரம் அருகே உள்ள தேவாலயத்துக்குச் சென்றிருந்தார் தனசேகரன். அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது, திடீரெனத் தேவாலயத்துக் குள் நுழைந்த 4 பேர் அவரை அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர். அச்சமயம் தேவாலயத்தில் ஏராளமானோர் கூடி யிருந்தனர். அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இக்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின் றனர். கொலையாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக தனசேகரன் கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப் பட்ட நிலையில் தாம்பரம் பகுதி திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலிசார் குவிக்கப் பட்டுள்ளனர்.