ஓசூர்: கர்நாடகா- தமிழக எல்லை யில் தமிழக பதிவெண் கொண்ட 20 வாகனங்களை கர்நாடக போலி சார் தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானார்கள். ஓசூர் அருகே கர்நாடக எல்லை யான பள்ளூரில் ராமன் என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய் யப்பட்டார். அந்தக் கொலை தொடர் பாக விசாரணை நடத்த நேற்று முன்தினம் கர்நாடக போலிசார் ஓசூருக்கு விரைந்தனர்.
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலிஸ் உதவி ஆய்வாளர் சீனி வாஸ் தலைமையில் போலிசார் சாதாரண உடையில் வாகனங் களில் வந்துகொண்டிருந்தனர். தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் கர்நாடக போலிஸ் படையை தமிழக போலிசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் தமிழக போலிசார் அடையாள அட்டையைக் கேட்டார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் சீனிவாஸ் தமது காரை மீண்டும் கர்நாடகாவை நோக்கி ஓட்டச் சொன்னார். அத்திப்பள்ளி நினைவு வளைவு அருகில் காரை நிறுத்தச் சொன் னார். பின்னர் அவர் தலைமை யிலான போலிசார் கர்நாடகாவில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற தமிழக பதிவெண் கொண்ட கார், மோட்டார் சைக்கிள்கள் என 20க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக் கினார்கள்.
அந்த வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களையும் கர்நாடக போலி சார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக - கர்நாடக மாநில எல்லையில் நேற்று முன் தினம் இரவு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக இரு மாநில எல்லையில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து தமிழக போலிஸ் தரப்பில், பெங் களூரு மாவட்ட போலிஸ் அதிகாரி அமீத் சிங்கிடம் புகார் செய்ய ப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் சீனிவாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக போலிஸ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட கர்நாடக போலிஸ் அதிகாரியின் வாகனமும் தாக்கப்பட்ட லாரியும். படம்: தமிழக ஊடகம்