தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் கெடுத்த பாலியல் புகாரின் பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்பிணை கேரி மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்பிணை பெற்றுக்கெள்ளும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சசிகலா புஷ்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தெடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதேடு கைது செய்யவும் தடை விதித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா நேற்று முன்னிலையானார். அவரிடம் போலிசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா நேற்று செய்தியாளர் களிடம் பேசினார். படம்: ஊடகம்